search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவர வரைபடம்
    X
    வானிலை நிலவர வரைபடம்

    8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த போதிலும் சென்னைக்கு இன்னும் இயல்பான மழை கிடைக்கவில்லை.

    சென்னைக்கு குடிநீர் வழங்ககூடிய ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வரும் போதிலும் இன்னும் முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

    வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×