search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து
    X
    தீவிபத்து

    பெரியபாளையம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது

    பெரியபாளையம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த நகை, வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே மெய்யூர் வேம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதா அம்மாள் (70). கணவரை இழந்த இவர் பேத்தி மகேஸ்வரியுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை வீட்டில் உள்ள கியாஸ் ‘ஸ்டவ்’ அடுப்பில் ராதா அம்மாள் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் குடிசை தீப்பிடித்தது.

    உடனே ராதா அம்மாளும், அவரது பேத்தி மகேஸ்வரியும் குடிசையில் இருந்து வெளியே ஓடிவந்து விட்டனர். இதனால் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே ‘மளமள’வென எரிந்த தீயினால் குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது.

    இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 12½ பவுன் தங்க நகைகள், கட்டில், பீரோ, உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் ராதா அம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×