search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பள்ளியில் திருவள்ளுவர் வேடம் அணிந்து சுப்பராயன் மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்கும் காட்சி.
    X
    தனியார் பள்ளியில் திருவள்ளுவர் வேடம் அணிந்து சுப்பராயன் மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்கும் காட்சி.

    திருவள்ளுவர் வேடத்தில் மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லி கொடுக்கும் அரசு ஊழியர்

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் திருவள்ளுவர் வேடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து விளக்கம் அளித்து வருகிறார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் பகுதியை சேர்ந்தவர் திருக்குறள் சுப்புராயன். இவர் சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பிரிவு அலுவலகத்தில் ஊழியராக 31 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    திருக்குறள் மீது அதிக ஆர்வம் கொண்ட சுப்புராயன் திண்டிவனத்தில் திருவள்ளுவர் இறையானார் கோவில் அமைத்து அங்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்பித்து வருகிறார்.

    அதேபோல் புட்லூர் பகுதியில் திருக்குறள் பயிற்சி மையம் அமைத்து உள்ளார். மேலும் அவர் திருவள்ளுவர் வேடம் அணிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து விளக்கம் அளித்து வருகிறார்.

    இதுகுறித்து மாணவ- மாணவிகள் கூறும்போது, ‘திருவள்ளுவர் போல வேடம் அணிந்து திருக்குறளை சொல்லித் தருவதால் கற்பதில் ஆர்வம் அதிகமாக உள்ளது. விளக்கத்துடனும், சொல்லித் தருவதால் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை’ என்றனர்.
    Next Story
    ×