search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலி குடங்களுடன் போராட்டம்.
    X
    காலி குடங்களுடன் போராட்டம்.

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்ன மத்தம்பாளையம், பெரிய மத்தம்பாளையம், அங்காளம்மன்புரம், ஆதித்தனார் காலனி, காமாட்சிபுரம், சவுந்திரியா நகர், வினோபவா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கோவை- மேட்டுப் பாளையம் சாலை விரிவாக்கம் நடைபெற்று வந்ததால் ஊருக்குள் செல்லும் தண்ணீர் பைப்புகள் மாற்று இடத்தில் போடப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால் சாலை விரிவாக்கம் முடிந்த பிறகும் இதுவரை இந்த பகுதிகளில் தண்ணீர் பைப்புகள் போடவில்லை. இதனால் நாங்கள் 3 மாதங்களாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் வராததை கண்டித்து அப்பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியநாய க்கன்பாளையம் ஒன்றிய அலுவலர்கள், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×