search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்.
    X
    கோப்புப் படம்.

    பெண்ணை தாக்கி மானபங்கம்- வாலிபருக்கு வலைவீச்சு

    மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி (வயது 29). இவர் கணவரை விட்டு பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.

    அதே குடியிருப்பில் வசிக்கும் லோகபாலன் என்ற விஜய் (32) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நடுவழியில் நிறுத்தி இருந்தார். இது வீட்டுக்கு செல்ல இடையூறாக உள்ளதாக கூறி மோட்டார் சைக்கிளை சாமுண்டீஸ்வரி அப்புறப்படுத்தினார். இதற்கு லோகபாலன் எதிர்ப்பு தெரிவித்து சாமுண்டீஸ்வரியிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த லோகபாலன் தகாத வார்த்தைகளால் திட்டி சாமுண்டீஸ்வரியை தாக்கி மானபங்கம் செய்தார். மேலும் சாமுண்டீஸ்வரியின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். 

    இது குறித்து சாமுண்டீஸ்வரி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விரபத்திரசாமி வழக்குபதிவு செய்து லோகபாலனை தேடி வருகிறார்.
    Next Story
    ×