என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ்காரருக்கு அபராதம்
Byமாலை மலர்5 Dec 2019 12:22 PM GMT (Updated: 5 Dec 2019 12:22 PM GMT)
நெல்லையில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நெல்லை:
மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட்டுகளில் பயணம் செய்வோர் தலையில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையொட்டி ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த சட்டத்தை அமல்படுத்தும் போலீசாரும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நெல்லையில் நேற்று மாலை ஒரு போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவரை பிடித்து ரூ.100 அபராதம் விதித்தார். நவீன கையடக்க கருவியில் இருந்து அச்சிடப்பட்ட அபராத ரசீதும் போலீஸ்காரரிடம் வழங்கப்பட்டது. இந்த காட்சிகள் மற்றும் அபராதம் விதிப்பு ஆகியவை சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட்டுகளில் பயணம் செய்வோர் தலையில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையொட்டி ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த சட்டத்தை அமல்படுத்தும் போலீசாரும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நெல்லையில் நேற்று மாலை ஒரு போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவரை பிடித்து ரூ.100 அபராதம் விதித்தார். நவீன கையடக்க கருவியில் இருந்து அச்சிடப்பட்ட அபராத ரசீதும் போலீஸ்காரரிடம் வழங்கப்பட்டது. இந்த காட்சிகள் மற்றும் அபராதம் விதிப்பு ஆகியவை சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X