search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்புப்படம்)
    X
    கொள்ளை (கோப்புப்படம்)

    கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை திருட்டு

    கோவை சவுரிபாளையத்தில் வீட்டின் பூட்டைஉடைத்து 8½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    கோவை:

    கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சவுந்திராஜன். இவரது மனைவி நிர்மலா(வயது 72).

    நிர்மலா கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கோவாவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 8½ பவுன் தங்க நகை, 1 கேரட் வைரம், கம்மல் ஆகியவை காணாமல் போய் இருந்தன.

    நிர்மலா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×