search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

    தஞ்சை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்த விளார் அருகே உள்ள வடக்கு சூரியப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நித்யா (வயது 23). சக்திவேல் இறந்து விட்டார். நித்யா எம்.காம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜா(27).  மெடிக்கல் ஷாப்புக்கு மருந்து சப்ளை செய்யும் குடோனில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜாவும் நித்யாவும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவினர் என்பதால் ராஜா நித்யாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு பெண்ணுடன் ராஜாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக அறிந்த நித்யா இது பற்றி ராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு ராஜா மறுத்ததால்   நித்யா வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×