search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தருமபுரம் ஆதீனம் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    தருமபுரம் ஆதீனம் மறைவிற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமணி சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் 4-ந்தேதி அன்று பரிபூரண நிலையை அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

    இவர் சுமார் 48 ஆண்டுகள் சமயப்பணி, திருப்பணி மற்றும் சமூகப்பணிகள் பலவற்றிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவரது ஆன்மா கயிலைநாதர் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×