search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கி சேதமடைந்த தனியார் சொகுசு பஸ்சை படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் சிக்கி சேதமடைந்த தனியார் சொகுசு பஸ்சை படத்தில் காணலாம்.

    காவேரிப்பட்டணம் அருகே லாரி-சொகுசு பஸ் மோதல்: பயணி பலி

    காவேரிப்பட்டணம் அருகே இன்று காலை லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதிய விபத்தில் பயணி ஒருவர் பலியானார். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    தேவகோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த சொகுசு பஸ் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் போத்தாபுரம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து முன்னால் ஈரோட்டில் இருந்து குஜராத்துக்கு துணி பாரம் ஏற்றி சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அப்போது பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை பஸ்சில் இருந்து மீட்டனர். 

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அப்போது   பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி கொண்டவர்களை மீட்டனர். இதில் பஸ்சில் இருந்த  பயணி திருச்சி மாவட்டம், குண்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (வயது56) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மனைவியும் இதே பஸ்சில் பயணம் செய்து வந்தார். மேலும் விபத்தில் 10 பெண்கள்,  குழந்தை உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். 

    படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக  மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன் ஸ்கள் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு  காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்தால் அந்த பகுதியில் இன்று காலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உடனடியாக இன்று காலை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    Next Story
    ×