search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை (கோப்புப்படம்)
    X
    தற்கொலை (கோப்புப்படம்)

    கோவையில் சொத்து தகராறில் மனைவியை கொன்ற கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை

    சொத்து தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை கோவில்பாளையம் துடியலூர் ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 74). இவரது மனைவி ராதாமணி (65). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    வயது முதிர்வால் சொத்துக்களை தங்களது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்து விட வேண்டும் என்று ராதாமணி, தனது கணவரிடம் அடிக்கடி கூறி வந்தார். இதற்கு பழனிசாமி தொடர்ந்து மறுத்து வந்தார்.

    கடந்த மாதம் ராதாமணி தனக்கு சொந்தமான ஒரு வீட்டை மகள் யசோதா பெயரில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இது பழனிசாமிக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி தூங்கி கொண்டு இருந்த ராதாமணியை அரிவாளால் வெட்டினார். இதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். மறுநாள் காலையில் ராதாமணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து ராதாமணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பழனிசாமியை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் மனைவியை கொலை செய்ததால் வேதனை அடைந்த பழனிசாமி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×