என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் உச்சத்தை தொட்ட ‘வெங்காயம்’ விலை
Byமாலை மலர்4 Dec 2019 9:06 AM GMT (Updated: 4 Dec 2019 9:06 AM GMT)
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம் கிலோ ரூ.160க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தொடர்ந்து வெங்காய விலை ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம் கிலோ ரூ.160க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இல்லத்தரசிகள் சமையலுக்கு அத்தியாவதிய தேவையாக வெங்காயம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை ஏற்றத்திலேயே இருப்பதால் இல்லத்தரசிகள் மட்டுமின்றி ஓட்டல் கடை உரிமையாளர்களும் மிகவும் சிரமமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தஞ்சை காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தால் பெரும்பாலான வியாபாரிகள் வெங்காயத்தை வாங்கி விற்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் வெங்காயத்தின் வரத்தும் பெருமளவு குறைந்துள்ளது.
வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வெங்காயத்தை வாங்கி இருப்பு வைக்காமல் அன்றாடம் விற்பனைக்கு தேவையானவற்றை மட்டுமே வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தொடர்ந்து வெங்காய விலை ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம் கிலோ ரூ.160க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இல்லத்தரசிகள் சமையலுக்கு அத்தியாவதிய தேவையாக வெங்காயம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை ஏற்றத்திலேயே இருப்பதால் இல்லத்தரசிகள் மட்டுமின்றி ஓட்டல் கடை உரிமையாளர்களும் மிகவும் சிரமமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தஞ்சை காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தால் பெரும்பாலான வியாபாரிகள் வெங்காயத்தை வாங்கி விற்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் வெங்காயத்தின் வரத்தும் பெருமளவு குறைந்துள்ளது.
வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வெங்காயத்தை வாங்கி இருப்பு வைக்காமல் அன்றாடம் விற்பனைக்கு தேவையானவற்றை மட்டுமே வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X