search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓட்டலில் தகராறு- வாலிபரை வெட்டிய 3 பேர் கைது

    கோயம்பேடு அருகே ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் அண்ணா நகரில், தனியார் வணிக வளாகத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் அசாருதீன் இருவரும் நள்ளிரவு 1மணி அளவில் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்றனர்.

    அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 3 பேர், இவர்களுடன் தகராறு செய்தனர். கத்தியால் அசாருதீனை இடது கையில் வெட்டினர். இதை தட்டிக்கேட்ட தினேசையும் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் வழக்குபதிவு செய்து நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மாடா விக்கி என்கிற விக்னேஷ், தியாகராஜன், மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×