search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    ஒரத்தநாட்டில் ஆசிரியை வீட்டில் திருட்டு

    ஒரத்தநாட்டில் ஆசிரியை வீட்டில் பீரோவை உடைத்து பணம், நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு ஆர்.வி.எஸ் நகரை சேர்ந்தவர் ஏஞ்சல் (வயது 62) ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவர் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் அங்கு வந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து பணம், நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.  

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஏஞ்சலுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி..டிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தார். அதனைக் கொண்டு ஒரத்தநாடு குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×