search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.
    சென்னை: 

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பொதுக்கூட்டங்கள், பேட்டி, அறிக்கைகள் மூலம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை அவதூறாக சித்தரித்து பேசியதாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அதில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை விஜயகாந்த் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.

    மேலும், சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ள 3 வழக்குகள் குறித்த விசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
    Next Story
    ×