என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டாஸ்மாக் கடை அருகே வாலிபர் அடித்துக் கொலை
கோவை:
கோவை ஈச்சனாரி கே.பி.எம். பஸ் நிறுத்தம் பின்புறம் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் முட்புதர்கள் உள்ளது. இந்த புதரில் 45 வயது மதிக்கதக்க ஆண் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது பிணமாக கிடந்தவர் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. அவரை யாரோ அடித்து கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரை வேறு எங்காவது அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை டாஸ்மாக் கடை அருகே உள்ள புதரில் வீசி சென்றார்களா? அல்லது மதுக்கடைக்கு குடிக்க வந்த போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்று உடலை வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்