search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    டாஸ்மாக் கடை அருகே வாலிபர் அடித்துக் கொலை

    டாஸ்மாக் கடை அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஈச்சனாரி கே.பி.எம். பஸ் நிறுத்தம் பின்புறம் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் முட்புதர்கள் உள்ளது. இந்த புதரில் 45 வயது மதிக்கதக்க ஆண் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது பிணமாக கிடந்தவர் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. அவரை யாரோ அடித்து கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரை வேறு எங்காவது அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை டாஸ்மாக் கடை அருகே உள்ள புதரில் வீசி சென்றார்களா? அல்லது மதுக்கடைக்கு குடிக்க வந்த போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்று உடலை வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×