என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கரூர் அருகே தாசில்தார் வீட்டில் நகை திருடிய நபர்களுக்கு வலைவீச்சு
கரூர்:
கரூர் அடுத்த மண்மங்க லம் வட்டாட்சியர் அலுவல கத்தில் தனிப்பிரிவு தாசில்தாராக பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் தாந்தோனி காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு காந்தி கிராமம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். மீண்டும் இரவு 9 மணி அளவில் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 6 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றுள்னர்.
இது குறித்து ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நகை திருடிய மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்