search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    தென்தாமரைகுளம் அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் தற்கொலை

    தென்தாமரைகுளம் அருகே குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்தாமரைகுளம்:

    தென்தாமரைகுளம் பூஜபுரைவிளை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 68). இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.

    இவர், குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். சம்பவத்தன்று குடித்து விட்டு அவர் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மன வேதனையுடன் அய்யாத்துரை காணப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் அவர், வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தென்தாமரை குளம் போலீசில் அவரது மகன் விக்னேஷ் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி, (வயது 39), மீன் வியாபாரி.

    இவருக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். மேலும் யாருடனும் பேசாமல் அவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியில் சென்றிருந்த அவரது மனைவி வீடு திரும்பியபோது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தோணியின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×