search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் இன்று காலை த.மு.மு.க நிர்வாகி விபத்தில் பலி

    கோவையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் விபத்தில் த.மு.மு.க நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அப்துல்பஷீர் (வயது 36). இரும்பு வியாபாரி. மற்றும் த.மு.மு.க.வின் தெற்கு பகுதி தலைவராக இருந்தார். இவர் கேரள மாநிலம் மன்னார்காட்டில் உள்ள தனது குடும்பத்தினரை பார்த்து விட்டு இன்று காலை மோட்டார் சைக்கிளில் கோவைக்கு புறப்பட்டார்.

    எட்டிமடை அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நின்ற லாரியின் பின்பக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்து ல்பஷீர் படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×