என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் இறப்புக்கு அரசின் அலட்சியம்தான் காரணம் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Byமாலை மலர்3 Dec 2019 6:22 AM GMT (Updated: 3 Dec 2019 6:22 AM GMT)
மேட்டுப்பாளையத்தில் மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் இறந்ததற்கு அரசின் அலட்சியம்தான் காரணம் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் மழையால் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்தால், விபத்து ஏற்பட்டு 17 பேர் இறந்திருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 17 பேரின் உயிர் போயிருக்காது.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 4 லட்சம் ரூபாய் நிதியுதவி போதாது. கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும். 17 பேர் இறப்பிற்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X