என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாளக்குடி அரசு பள்ளியில் தீ விபத்து- ரூ.1 1/2 லட்சம் கணினிகள் எரிந்து நாசம்
Byமாலை மலர்2 Dec 2019 5:41 PM GMT (Updated: 2 Dec 2019 5:41 PM GMT)
நெ.1டோல்கேட் அருகே தாளக்குடி அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள கணினிகள் எரிந்து நாசம் ஆனது.
நெ.1.டோல்கே:
நெ.1டோல்கேட் அருகே தாளக்குடியில் அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு கணினிவழி கல்வி கற்றுக் கொடுப்பதற்காக 15 கணினிகள் கொண்ட தனி கட்டிடம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இந்த கட்டிடத்தில் புகை மூட்டம் வந்தது.
இதனைக்கண்ட பொதுமக்கள் இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிடத்தின் பூட்டை உடைத்து தண்ணீரை பீய்ச்சியடித்து புகைமூட்டத்தைகட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் சுமார் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள 5 கணினிகள் மற்றும் மாணவர் களின் பதிவேடு புத்தகங்கள் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கட்டிடத்தில் இருந்த எலக்ட் ரிக்கல் ஸ்விட்ச் பாக்சில் மின் கசிவு ஏற்பட்டு, அதன் மூலம் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X