search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கோவையில் 2 இளம்பெண்கள் மாயம்

    கோவையில் 2 இளம்பெண்கள் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    சேலம் ஆத்தூர் பெத்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னன்ணன். இவரது மகள் கார்த்திகா (வயது 22). இவர் சம்பவத்தன்று கோவைபுதூரில் உள்ள மாமா வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டார்.

    கோவை காந்திபுரத்திற்கு தோழியுடன் கால் டாக்சியில் வந்த கார்த்திகா தோழியை காந்திபுரத்தில் இறக்கி விட்டார். அதன்பின்னர் கால்டாக்சியில் சென்றார்.

    உரிய நேரமாகியும் மாமா வீட்டுக்கும் செல்லவில்லை. சொந்த ஊருக்கும் திரும்பவில்லை. கார்த்திகா மாயமானதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து கார்த்திகாவின் தந்தை கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகாவை தேடி வருகிறார்கள்.

    இதேபோன்று கோவை இருகூர் சவுடேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரவி. கட்டிடத்தொழிலாளி. இவரது மகள் ஷாலினி (17). 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு தையல் பழகி வருகிறார்.

    சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டுச்சென்ற ஷாலினி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்காததால் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஷாலினியை தேடி வருகிறார்.

    கோவையில் 2 இளம்பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×