search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருப்பூர் அருகே விபத்தில் 2 பேர் பலி

    திருப்பூர் அருகே கார் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சார்ந்த பாரத் (வயது 24). இவரது தந்தை மோகன், தாய் கவிதா, தம்பி அமர்நாத் (18 மற்றும் உறவினர் லோகு (47) ஆகிய 5 பேர் நேற்று மாலை காரில் கோவை புறப்பட்டனர். சூலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று காலை ஊருக்கு புறப்பட்டனர். கார் அவிநாசி அடுத்த பெருமாநல்லூர் அருகே உள்ள ஆதியூர் பிரிவில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மைய தடுப்பின் மீது மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே பாரத் மற்றும் லோகு ஆகியோர் படுகாயம் அடைந்து பலியானார்கள். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களை பெருமாநல்லூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×