என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிங்காநல்லூரில் மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
சிங்காநல்லூர்:
கோவை ஒண்டிப்புதூர் கம்பன் நகர் கருப்புசாமி என்பவரது மகள் ஜீவிதா (வயது 19).இவர் சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரி சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஜீவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், ஏட்டுபாலமுருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜீவிதா அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் உடுமலை போலீசில் சரணடைந்தார். இருவரும் காதலிப்பதாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர். இது குறித்து உடுமலை போலீசார் சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் காதல்ஜோடியை மீட்டு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜீவிதா தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கணவருடன் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்