என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சோழவந்தானில் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.80 ஆயிரம்-செல்போன்கள் கொள்ளை
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் மார்க்கெட் பகுதியில் சதீஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் கடையை பூட்டிவிட்டு சதீஷ் வீட்டுக்குச் சென்று விட்டார்.
நள்ளிரவு நேரத்தில்அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம், 30 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினர். செல்போன்களின் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும்.
காலை கடையின் ஷட்டர் திறந்திருப்பதை கண்ட அந்தப்பகுதி மக்கள் உடனே கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். சதீஷ் விரைந்து வந்து பார்த்த போது பணம்-செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்