என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மோதல்: வேன் டிரைவர் பலி
Byமாலை மலர்1 Dec 2019 4:07 PM GMT (Updated: 1 Dec 2019 4:07 PM GMT)
வெள்ளகோவில் அருகே அரசு பஸ்சும், வேனும் மோதி கொண்ட விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
கோவையில் இருந்து கரூர் நோக்கி மினிவேன் ஒன்று சென்றது. இந்த வேன் நேற்று இரவு 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் வந்தது. அப்போது எதிரே கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், வேனும் மோதி கொண்டது. இதில் வேனை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த சரவணன்(40) பலத்த காயம் அடைந்தார். பஸ் கண்டக்டர் உள்பட 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வேன் டிரைவர் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X