search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிப்பு
    X
    தீக்குளிப்பு

    நாசரேத் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் மரணம்

    நாசரேத் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு கிழக்குதெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 44), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத் அருகே உள்ள ஓய்யான்குடியை சேர்ந்த பிரேமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

     கடந்த 2012-ம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் பிரேமா இறந்து போனார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜெயசீலன் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த அகஸ்டா (40) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜெயசீலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    கடந்த 26-ம் தேதி வீட்டிற்கு ஜெயசீலன் குடித்து விட்டு வந்ததால் மீண்டும்  கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அகஸ்டா மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து கொண்டார்.  உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.  

    இதுகுறித்து அவரது அண்ணன் செல்வராஜ் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுகுறித்து நெல்லை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×