search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் கனமழை
    X
    தமிழகத்தில் கனமழை

    தொடர்மழை எதிரொலி - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×