search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் மழை
    X
    புதுச்சேரியில் மழை

    கனமழை எதிரொலி - புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியால், புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

    இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. ஒருசில இடங்களில் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். தொடர் மழையினால் புதுவையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
    Next Story
    ×