search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நாமக்கல்லில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

    நாமக்கல்லில் குடும்ப தகராறில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). ஜோதிடர். இவரும், நாமக்கல் அன்னை சத்யா நகரை சேர்ந்த சாவித்திரி (26) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 வயதில் தனேஷ் என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாவித்திரி, கணவரிடம் கோபித்துக்கொண்டு நாமக்கல்லில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் மணிகண்டன், சாவித்திரியை மீண்டும் குடும்பம் நடத்த அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சாவித்திரி வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சாவித்திரியின் தந்தை பெரியசாமி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் இளம்பெண் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×