என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்29 Nov 2019 5:48 PM GMT (Updated: 29 Nov 2019 5:48 PM GMT)
நாமக்கல்லில் குடும்ப தகராறில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). ஜோதிடர். இவரும், நாமக்கல் அன்னை சத்யா நகரை சேர்ந்த சாவித்திரி (26) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 வயதில் தனேஷ் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாவித்திரி, கணவரிடம் கோபித்துக்கொண்டு நாமக்கல்லில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் மணிகண்டன், சாவித்திரியை மீண்டும் குடும்பம் நடத்த அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சாவித்திரி வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சாவித்திரியின் தந்தை பெரியசாமி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் இளம்பெண் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). ஜோதிடர். இவரும், நாமக்கல் அன்னை சத்யா நகரை சேர்ந்த சாவித்திரி (26) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 வயதில் தனேஷ் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாவித்திரி, கணவரிடம் கோபித்துக்கொண்டு நாமக்கல்லில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் மணிகண்டன், சாவித்திரியை மீண்டும் குடும்பம் நடத்த அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சாவித்திரி வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சாவித்திரியின் தந்தை பெரியசாமி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் இளம்பெண் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X