search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    குன்றத்தூரில் தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து

    குன்றத்தூரில் தனியார் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள நோட்டு, புத்தகங்கள் எரிந்து நாசமாயின.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் முருகன் கோயில் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. நேற்று நள்ளிரவில் திடீரென இந்த பள்ளியின் இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் இருந்து புகை அதிக அளவில் வந்தது. இதை கண்டதும் அங்கிருந்த காவலாளி சென்று பார்த்தபோது அறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அறையில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர்.

    அதிக அளவில் புகை சூழ்ந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பள்ளியின் அறையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் தீயில் எரிந்து நாசமாயின. முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    குன்றத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×