என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆலங்குளம் அருகே சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முக பெருமாள். இவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 26) என்பவருக்கும், 17-வயதுடைய சிறுமிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நாளை (30-ந்தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரின் பெற்றோரிடம் விசாரித்து, சிறுமிக்கு 18-வயது முடிவடைந்த பின்னர் தான் திருமணம் நடத்த வேண்டும் என கூறி நாளை நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் பெற்றோர்கள் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பிறகு திருமணத்தை நடத்தி கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்