search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திண்டுக்கல் அருகே வாகனம் மோதி 2 பேர் பலி

    திண்டுக்கல் அருகே பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    கன்னிவாடி:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சசிக்குமார் (வயது35). காளையார்கோவிலை சேர்ந்த பாலமுருகன் (40) 2 பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பினர். திண்டுக்கல்- பழனி சாலையில் இடையப்பட்டி பிரிவு அருகே வந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் உடல் நசுங்கிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான ரெட்டியார்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அவர்கள் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×