என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை
Byமாலை மலர்29 Nov 2019 8:43 AM GMT (Updated: 29 Nov 2019 8:43 AM GMT)
மாதவரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மாதவரம்:
மாதவரம் தணிகாசலம் நகர் இ-பிளாக் ராஜாஜி 1-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.
நேற்று மாலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 சவரன் நகை ரூ.10 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து நாகராஜ் மாதவரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
மாதவரம் தணிகாசலம் நகர் இ-பிளாக் ராஜாஜி 1-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.
நேற்று மாலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 சவரன் நகை ரூ.10 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து நாகராஜ் மாதவரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X