என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எழும்பூரில் திருடிய செல்போனுக்கு சண்டை போட்ட 3 கொள்ளையர்கள்
Byமாலை மலர்28 Nov 2019 11:11 AM GMT (Updated: 28 Nov 2019 11:11 AM GMT)
எழும்பூரில் அசாம் மாநில வாலிபரிடம் திருடிய செல்போனுக்காக சண்டை போட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
எழும்பூர் கண் மருத்தவமனை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் நேற்று இரவு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக எழும்பூர் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பட்டாளத்தை சேர்ந்த இம்தியாஸ், அசேன், மூலக்கடை சர்மாநகரை சேர்ந்த இர்பான் என்பது தெரிய வந்தது. திருட்டு செல்போன் ஒன்றையும் வைத்திருந்தனர்.
3 பேரும் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் வழியே மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவரை தாக்கி செல்போனை பறித்துள்ளனர்.
இந்த செல்போனுக்காகவே 3 பேரும் சண்டை போட்டுள்ளனர். அப்போதுதான் போலீசில் சிக்கிக் கொண்டனர். செல்போன் பறிப்பு தொடர்பாக சுனில் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.
தனது செல்போனுக்கு பின்னால் சுனில் ஆதார் அட்டையை வைத்திருந்தார். இதனை வைத்தே 3 பேரும் திருடி வந்தது அவரது செல்போன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இம்தியாஸ், அசேன், இர்பான் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எழும்பூர் கண் மருத்தவமனை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் நேற்று இரவு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக எழும்பூர் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பட்டாளத்தை சேர்ந்த இம்தியாஸ், அசேன், மூலக்கடை சர்மாநகரை சேர்ந்த இர்பான் என்பது தெரிய வந்தது. திருட்டு செல்போன் ஒன்றையும் வைத்திருந்தனர்.
3 பேரும் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் வழியே மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவரை தாக்கி செல்போனை பறித்துள்ளனர்.
இந்த செல்போனுக்காகவே 3 பேரும் சண்டை போட்டுள்ளனர். அப்போதுதான் போலீசில் சிக்கிக் கொண்டனர். செல்போன் பறிப்பு தொடர்பாக சுனில் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.
தனது செல்போனுக்கு பின்னால் சுனில் ஆதார் அட்டையை வைத்திருந்தார். இதனை வைத்தே 3 பேரும் திருடி வந்தது அவரது செல்போன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இம்தியாஸ், அசேன், இர்பான் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X