என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்28 Nov 2019 9:13 AM GMT (Updated: 28 Nov 2019 9:13 AM GMT)
வருகிற 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் சென்னையில் மிதமான முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று முதல் வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வருகிற 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 30-ந் தேதி (சனிக்கிழமை) டிசம்பர் 1, 2 தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 3 நாட்களும் மிதமான முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. தாம்பரம் ஐ.ஏ.எஸ். 13 செ.மீ., ஜெயங்கொண்டம் 10 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் 9 செ.மீ., காட்டுமன்னார்கோவில் 8 செ.மீ., சீர்காழி, கடலூர் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று முதல் வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வருகிற 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 30-ந் தேதி (சனிக்கிழமை) டிசம்பர் 1, 2 தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 3 நாட்களும் மிதமான முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. தாம்பரம் ஐ.ஏ.எஸ். 13 செ.மீ., ஜெயங்கொண்டம் 10 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் 9 செ.மீ., காட்டுமன்னார்கோவில் 8 செ.மீ., சீர்காழி, கடலூர் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X