என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 44 பேர் கைது
Byமாலை மலர்27 Nov 2019 5:17 PM GMT (Updated: 27 Nov 2019 5:17 PM GMT)
நாமக்கல்லில் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு மையங்களை மூடுவதையும், இணைப்பதையும் கைவிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக அகவிலைபடியுடன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத் தொகையை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தகுதி உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு அரசு துறையில் உள்ள காலியிடங்களில் பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோமதி, மாவட்ட பொருளாளர் சரோஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் 28 பெண்கள் உள்பட மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் பள்ளி பஸ்சில் ஏற்றப்பட்டு, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X