search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    நொய்யல் அருகே விவசாயி மீது தாக்குதல்

    நொய்யல் அருகே விவசாயி மீது தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் தளவாபாளையம், மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன்(வயது 66) விவசாயி. இவர் தனது  வீட்டின் முன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(48) என்பவர் காளியப்பனைப் பார்த்து இங்கு எதற்காக அமர்ந்திருக்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், காளியப்பனை தாக்கினார். படுகாயமடைந்த காளியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு  வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×