search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி மாயம்
    X
    தொழிலாளி மாயம்

    நாங்குநேரி அருகே கட்டிட தொழிலாளி மாயம்

    நாங்குநேரி அருகே கட்டிட தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பக ராமநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரமு. இவரது 2-வது மகன் மகேஷ் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்ற மகேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமு அக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் மகேஷ் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான மகேஷை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×