search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெல்லை அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    நெல்லை அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சாந்தி (வயது19). சாந்தி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சாந்திக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

    அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். சம்பவத்தன்று சாந்தியின் சித்தி மோட்டார் சைக்கிளில் இருவரும் செல்வதை பார்த்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த சாந்தியை அவரது சித்தி மற்றும் வேலு ஆகியோர் சேர்ந்து சத்தம் போட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த சாந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×