search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்புப்படம்)
    X
    கொள்ளை (கோப்புப்படம்)

    பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் பறித்த திருநங்கைகள்

    சென்னை வடபழனியில் ஆசிர்வாதம் செய்வது போல் நடித்து பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் பறித்த திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    வடபழனி அழகிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் பரிமளா(27).

    இவர் நேற்று மாலை 100அடி சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வந்த 3 திருநங்கைகள் பரிமளாவிடம் பணம் கேட்டனர். அவர்களுக்கு பரிமளா ரூ.100 கொடுத்தார். அப்போது ஆசிர்வாதம் செய்வதாக கூறிய திருநங்கைகள் பரிமளாவின் கவனத்தை திசை திருப்பி அவரது கைப்பையில் இருந்து ரூ.47ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வடபழனி குற்றப்பிரிவு போலீசில் பரிமளா புகார்  செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமிராவின் வீடியோ பதிவு மூலம் திருநங்கைகளை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×