என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் முன்விரோத தகராறில் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
மதுரை:
மதுரை அனுப்பானடி ஆனந்தபைரவ பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது45). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா வைப்பது தொடர்பாக மீனாட்சி சுந்தரத்துக்கும், சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மீனாட்சிசுந்தரம் கடையை பூட்டிவிட்டு ஊழியர் ஆனந்தவேல் பாண்டியனுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டால்டா சரவணன், கலையரசன், எலி அருண் ஆகிய 3 பேர் மீனாட்சிசுந்தரத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்கள் திடீரென 3 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் மீனாட்சிசுந்தரம் படுகாயம் அடைந்தார். இதை தடுக்க வந்த ஆனந்தவேல் பாண்டியனும் தாக்கப்பட்டார்.
இது குறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து எலி அருணை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்