search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    மதுரையில் முன்விரோத தகராறில் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

    மதுரையில் முன்விரோத தகராறில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி ஆனந்தபைரவ பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது45). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா வைப்பது தொடர்பாக மீனாட்சி சுந்தரத்துக்கும், சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மீனாட்சிசுந்தரம் கடையை பூட்டிவிட்டு ஊழியர் ஆனந்தவேல் பாண்டியனுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டால்டா சரவணன், கலையரசன், எலி அருண் ஆகிய 3 பேர் மீனாட்சிசுந்தரத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அவர்கள் திடீரென 3 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் மீனாட்சிசுந்தரம் படுகாயம் அடைந்தார். இதை தடுக்க வந்த ஆனந்தவேல் பாண்டியனும் தாக்கப்பட்டார்.

    இது குறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து எலி அருணை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×