search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை மிரட்டல்
    X
    கொலை மிரட்டல்

    திசையன்விளை அருகே மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

    திசையன்விளை அருகே மனைவியின் ஆதார் அட்டையை கொடுக்க மறுத்த மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூசைரத்தினம். இவரது மனைவி மிக்கேல்கனி (வயது 56). இவரது மகள் பிளஸ்சிக்கும், அதே ஊரை சேர்ந்த பொன்வேந்தன் (32) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கருத்துவேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். பிளஸ்சி சென்னையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொன்வேந்தன் அவரது மாமியாரிடம் அவரது ஆதார் அட்டையை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி மிக்கேல்கனி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்வேந்தனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×