என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுக்கடையில் சமையல் மாஸ்டர்-காவலாளியை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ் நிலையம் பின்புறம் கண்ணன் நகரில் தனியார் மதுபான கடை உள்ளது. நேற்று மாலை இந்த மதுக்கடையில் ஒரு வாலிபர் மதுகுடித்துவிட்டு குடிபோதையில் குடிநீர் குழாய் அருகே சிறுநீர் கழித்தார். இதனை அங்கிருந்த காவலாளி பழனி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் காவலாளி பழனியை சரமாரியாக தாக்கினர். இதனை தட்டிக் கேட்ட சமையல் மாஸ்டர் மைக்கேல்(வயது31) என்பவரையும் அந்த வாலிபர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மைக்கேல் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் இளமுருகு மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து சமையல் மாஸ்டர் மற்றும் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை புதிய பஸ் நிலையத்தில் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் உறுவையாறு பகுதியை சேர்ந்த அருண்ராஜ் (24) என்பது தெரியவந்தது. இதையடுதது அருண்ராஜை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்