search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செம்பட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

    செம்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஆத்தூர்:

    நிலக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது21), சதீஷ்குமார் (21) ஆகியோர் இன்று காலை செம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே அர்ஜூனன் என்பரது செல்போனை பறித்துக்கொண்டு ஓட முயன்றனர்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் துறத்திப்பிடித்து செம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×