search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    ராயபுரத்தில் பெண்ணிடம் பணம்- செல்போன் பறிப்பு

    ராயபுரத்தில் பெண்ணிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தாம்பரத்தை சேர்ந்தவர் உஷ்னா பானு. நேற்று இரவு தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து வந்தார். ராயபுரம் சூரியநாராயணா தெருவில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் உஷ்னா பானுவிடம் இருந்த பேக்கை பறித்து சென்றனர்.

    அதில் ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் இருந்தது. இது குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமிரா வீடியோ பதிவு மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×