search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பூந்தமல்லி அருகே அம்மன் கோவிலில் நகை- உண்டியல் கொள்ளை

    பூந்தமல்லி அருகே அம்மன் கோவிலில் நகை- உண்டியல் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் வெத்தலை தோட்டம் ஏரிக்கரை சாலையில் செல்வ கணபதி நகரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    கோவில் பூசாரி கருப்பு சாமி நேற்று இரவு 8.30 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் கோவிலை பூசாரி திறக்க வரும் போது முன் பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்திலிருந்த 5 சவரன் நகையும், 3 அடி உயரம் கொண்ட உண்டியலும் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் இரவு 12.45 மணிக்கு கொள்ளையர்கள் வந்து போகும் உருவம் பதிந்துள்ளது.

    கொள்ளை போன உண்டியலில் ரூ.15 ஆயிரம் வரை இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×