search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே மின்வாரிய அதிகாரியை மிரட்டியவர் கைது

    திருவள்ளூர் அருகே மின்வாரிய அதிகாரியை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி.இவர் காக்களூரில் உள்ள மின்வாரிய இளநிலைப் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து பயனாளி ஒருவரது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இளநிலை பொறியாளர் தினகரனிடம் தெரிவித்தார்.

    மேலும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் உயர் அதிகாரிகளிடம் சொல்லி சிக்கலில் மாட்டிவிடுவேன் என்றும் தினகரனிடம் கூறி கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மின்வாரிய இளநிலை பொறியாளர் தினகரன் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர். அவர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான பார்த்தசாரதியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×