என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
திருப்பூர்:
திருப்பூர் தென்னம் பாளையம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மனைவி கலாவதி (வயது 57). இவர் ஆர்.வி.இ. லே அவுட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
இந்நிலையில் கலாவதியை பார்த்த அவர்கள் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்துக்கொண்டனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் திடீரென கலாவதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்தார்.
உடனே கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச்சென்றனார். இதில் நிலைகுழைந்த கலாவதி கீழே விழுந்தார். தொடர்ந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து அவர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று தப்பியோடிய வாலிபர்களை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்