என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாரண்டஅள்ளி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் தொழிலாளி பிணம்
Byமாலை மலர்25 Nov 2019 4:02 PM GMT (Updated: 25 Nov 2019 4:02 PM GMT)
மாரண்டஅள்ளி அருகே இன்று காலை ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை அடுத்துள்ள கோவிலூரான் கொட்டாய் அருகே ரெயில்வே தண்ட வாளத்தில் இன்று காலை 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் ஓசூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவர்களும் எங்களுக்கு யார் என்று தெரியவில்லை என்று கூறினர்.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓசூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X